முகப்பு தொடக்கம்

 
எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
தொடங்கியா யிரநாவால் யோக மெல்லாஞ்
       சொல்லினுநீ போகியெனப் படுவாய் மண்ணை
விடும்பரிசு நினக்கில்லை பணம்போ மாயின்
       வீந்திடுவை விரைகமழ்மென் மலர்க்கட் பெம்மான்
முடங்குறினு நினைவிடுமோ வளியுள் வாங்கு
       முயற்சியால் யோகியெனப் படாய னந்தா
அடைந்தசிவ ஞானியெனும் பரம யோகி
       யல்லைகாண் சொற்சொலவே வல்லை நீயே.
(88)