முகப்பு
தொடக்கம்
தோற்றிடும் பிறவி யெனுங்கடல் வீழ்ந்து
துயர்ப்பிணி யெனுமலை யலைப்பக்
கூற்றெனு முதலை விழுங்குமுன் னினது
குரைகழற் கரைபுக விடுப்பாய்
ஏற்றிடும் விளக்கின் வேறுபட் டகத்தி
னிருளெலாந் தன்பெய ரொருகாற்
சாற்றினு மொழிக்கும் விளக்கெனுஞ் சோண
சைலனே கைலைநா யகனே.
(56)