முகப்பு தொடக்கம்

 
பாங்கனிறைவனைத்தேற்றல்
தடங்கொண்ட கண்ணி யிடத்தார் திருவெங்கைத் தண்டலையை
இடங்கொண்டு காமப் புனனீந்தி நீகரை யேறுதற்குக்
குடங்கொண்டு நின்ற வொருமாதைக் கண்டு குறுகுமட்டுந்
திடங்கொண்டு நெஞ்சந் தளராது நிற்றி திறலவனே.
(53)