முகப்பு தொடக்கம்

 
அந்நகைபொறாஅ தவன்புலம்பல்
தடாது விளங்கொளி யானார் திருவெங்கைத் தையனல்லாய்
படாது வளர்முலை யால்வரு நோயைப் பரிகரித்து
விடாது நகைசெய் திகழ்வ தளற்றில் விழுந்தவரை
எடாது மரும முருவச்செவ் வேல்கொண் டெறிவதுவே.
(116)
Siva prakasa panuval thirattu
முகப்பு தொடக்கம்

 
பாங்கி தலைவனைத் தேற்றல்
தொடர்ந்தாளும் வெங்கைப் பழமலை வாணரச் சுந்தரர்சொற்
கடந்தாலு மென்சொற் கடவாள் வரிச்செங் கயன்மருட்டும்
விடந்தா ழயிற்கண் மடமான் றருமயல் வெள்ளத்திலே
கிடந்தா குலமுற்றி டேல்விடு வாயுன் கிலேசத்தையே.
(117)