முகப்பு
தொடக்கம்
பின்னாணெடுந்தகை குறிவயினீடுசென்றிரங்கல்
தன்னோ டிருந்த பொழுதிளஞ் சோலைசெய் தன்மைகண்டேற்
கன்னோ தனியிருந் தாற்செய்யு மாறு மறிவிக்கவோ
மின்னோ வெனநின் றவிர்சடை யார்திரு வெங்கைவெற்பில்
என்னோ வறிந்தருள் செய்வான் வராம லிருந்ததுவே.
(163)