முகப்பு தொடக்கம்

 
கண்டோரிரக்கம்
துன்படு மையர் திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேல்
மின்படு நுண்ணிடை யாள்விளை யாடிய மென்பொழிலும்
பொன்படு மூசலும் வண்டலம் பாவையும் பூவையுங்கண்
டென்படு மோவறி யேம்பெற்ற தாயென் றிருப்பவளே.
(341)
Siva prakasa panuval thirattu
முகப்பு தொடக்கம்

 
ஆற்றிடை முக்கோற்பகவரை வினாதல்
தன்னைத் தலைவனை நின்றாங் கறிந்து தவம்புணர்ந்து
முன்னைப் பவந்தொலைத் தீருண்மை கூறுமின் மூரிவெள்ளம்
மின்னைப் பொருசெஞ் சடையில்வைத் தார்வெங்கை வெற்பிலெங்கள்
பொன்னைக் கரந்தொரு காளைகொண் டேதனி போயினனே.
(343)