|
தகரமலர் வார்குழற் பவளவாய் மடமாதர் தடநெடுங் கண்களென்னத் தாவுமறி கிடைகிடந் திடுபெருங் கொல்லையைத் தண்டிரை சுருட்டியெறியும் மகரமனை யுண்டதிர்த் தெழுகமஞ் சூன்மழை மாரியென வந்துபிளிறும் வளைமருப் புழல்செவிப் புகர்முகச் சிறுகணல் வலிவேழ மதநனைப்பப் பகரலரு மெறுழ்வலிப் பிறைமருப் பொருகரும் பன்றியது கண்டுசெவ்விப் பதமென்ன வுழவண்ட முகடுதொடு நெடியமுதிர் பணை தரள விதைவிதைக்குஞ் சிகரமணி மயிலைமலை முருகனுட னமருமிறை சிறுதே ருருட்டியருளே சிவசமய குலதிலக சிவஞான மாமுனிவ சிறுதே ருருட்டியருளே.
|
(2) |
|