|
தன்னொரு மகன்வா கனத்தினை வெறுத்தோர் தனயன்வா கனத்தினை விரும்புந் தண்மணிப் பணியு மதனையுள் வெருவித் தான்வள ராமதி யமும்வாழ் மின்னவிர் சடையான் றனை நினை யன்றி மேவுவா னவரைநெஞ் சுன்னல் விரிகதிர் விழுங்கு மணியினை விடுத்து வெறுமணி கொள்ளுமா றன்றோ மன்னவர் மனிதர் சந்திரன் பரிதி மகபதி மலரயன் மறலி வானவர் வசுக்கள் சித்தர்கிம் புருடர் மாதவர் விஞ்சைய ரசுரா கின்னர ருரகர் மூழ்குபே ரரவங் கேட்டொரு முராரிபாய் சுருட்டக் கிளர்மணி முத்த நதியுடை விருத்த கிரியமர் பெரியநா யகியே.
|
(7) |
|