முகப்பு
தொடக்கம்
பகற்குறி
கிழவோன்பிரிந்துழிக் கிழத்தி மாலையம்பொழுதுகண்டிரங்கல்
நந்தா மதுகைப் பழமலை யார்வெங்கை நாடனையாய்
வந்தாவி யம்புயம் வாட்டுமுன் னாளிலம் மாலையன்று
சிந்தா குலமுற வேதனித் தாரைச் செறுக்குமதன்
செந்தா மரையை மலர்த்துமிம் மாலைச் சிறுபொழுதே.
(145)