முகப்பு தொடக்கம்

நயங்கொளு மலரா னின்றிரு வடியை
      நாடொறு முயிருணுங் கூற்றம்
பயங்கொள வகலா தருச்சனை புரிந்து
      பரகதி யடையுநா ளுளதோ
வயங்கொளும் விடயப் பெரும்பகை கடந்து
      வானநா டாண்டிட மதிப்போர்
சயங்கொள வடைதற் கரணமாஞ் சோண
      சைலனே கைலைநா யகனே,
(79)