முகப்பு தொடக்கம்

நரர்கடமி னரசரவர் தமினினிய திவவியாழ்
        நண்ணுநர கந்தருவர்தா
    நவிலுமவர் தமினமர கந்தருவ ரவர்தம்மி
        னாடரிய தேவரவரில்
சுரரதிப னவனினுயர் சுரர்குரவ னவனினயன்
        சொன்முறையி னூறுமடிமேற்
    றுன்னுசுக மொருதிவலை யளவுமின் றாகமிக
        சுகவேலை புகலீகுவாய்
தரைமுதற் பூதங்கள் புத்திகுண தத்துவந்
        தகுதிபெறு பகுதிபுருட
    தத்துவம் வித்தைமுத லனவெனுமி வற்றிலறு
        சமயரென வெமைவிடாமல்
அருளினினை யடைதலுறு மரியபவ மருளுமவ
        னபிடேக மாடியருளே
    அறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை
        யபிடேக மாடியருளே.
(10)