முகப்பு தொடக்கம்

நவிற்றலரு மிதயமிளிர் கண்டநா வடிபுருவ
        நடுவுபிர மப்புழையெனு
    நல்லிடத் தகராதி கிரியாதி மனமுதல
        நண்ணியு மைம்மூவகை
இவற்றிலொவ் வொன்றகல நின்றவிட யங்களெதிர்
        வின்றிச்சி வாகாரமா
    எதிருநன வுஞ்சோக மென்றுபா வித்தலுறு
        மென்கனவு ஞாதுருவொடே
உவப்பறிவு ஞேயமென வுற்றனுப வித்திடு
        மொண்சுழுத் தியுஞானமே
    ஒளிர்துரிய முந்திளைத் துயர்சிவா னந்தநுகர்
        வுறுமதீ தமுமாகுநல்
அவத்தைகள் கடந்தவற் றப்புறப் படுமமல
        னபிடேக மாடியருளே
    அறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை
        யபிடேக மாடியருளே.
(3)