முகப்பு
தொடக்கம்
புணர்ச்சியின் மகிழ்தல்
நாவுண் கடலமு தொப்பா குவதன்று நல்லளிகள்
பூவுண் பொழில்புடை சூழ்வெங்கை வாணரைப் போற்றலுறும்
பாவுண் செவிச்சுவை யேயென லாமலர்ப் பாயலினில்
ஏவுண் கருங்கண் மடப்பாவை நல்கிய வின்பினையே.
(389)