முகப்பு தொடக்கம்

 
பரத்தையருலகியனோக்கிவிடுத்தலிற்றலைமகன் வரவுகண்டுவந்துவாயில்கண்மொழிதல்
நாவல ரென்றும் புகழ்வெங்கை வாணர்நன் னாடனையாய்
ஏவலர் தம்மை யெதிர்கண்ட போதி லிரவியெதிர்
பூவலர் கின்ற தெனவே மகிழ்ந்து புவிபுரக்குங்
காவலர் வந்தனர் தாமே யுலகியல் காப்பதற்கே.
(386)
Siva prakasa panuval thirattu
முகப்பு தொடக்கம்

 
புணர்ச்சியின் மகிழ்தல்
நாவுண் கடலமு தொப்பா குவதன்று நல்லளிகள்
பூவுண் பொழில்புடை சூழ்வெங்கை வாணரைப் போற்றலுறும்
பாவுண் செவிச்சுவை யேயென லாமலர்ப் பாயலினில்
ஏவுண் கருங்கண் மடப்பாவை நல்கிய வின்பினையே.
(389)