முகப்பு தொடக்கம்

 
புகழ்தல்
நாங்குழை யாம லருள்வோன் றிருவெங்கை நாயகன்கைத்
தாங்குழை யேயன்றி மென்முலை தாக்கித் தளருமிடைப்
பூங்குழை யாயெப் படிகுதித் தாலுமிப் புல்லறிவாய்
நீங்குழை யோநின் மதர்வே னெடுங்க ணிகர்ப்பதுவே.
(40)