முகப்பு தொடக்கம்

 
விருந்திறை விரும்பல்
நானக் களப முலையீ ரெனக்கு நவில்வதென்னீர்
வானத் தவர்தொழு தேத்துறுஞ் சீர்வெங்கை வாணர்க்குங்கள்
கானக் குறவ ரிறைமகன் றான்முனங் கல்லையிற்பெய்
ஏனத் தசைக்கறி யன்றோ மிகவு மினியதுவே.
(144)