முகப்பு
தொடக்கம்
தலைவன் போக்குடன்படுதல்
நாமொழி யாது புகழ்வா னருள்வெங்கை நாதரைச்சொற்
பாமொழி யானெய்த லாம்பாலை ஞானசம் பந்தனுக்குத்
தேமொழி யாயுன் னுயிரனை யாட்கருஞ் செம்பவள
வாய்மொழி யாளிளங் காவாகும் பட்ட மரங்களுமே.
(312)