முகப்பு தொடக்கம்

 
அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
நாடா வுழைகள் புனநாடு நாணுஞ் சுகமுஞ் சுகமாகும்
ஆடா மயிலு மரவுணவுண் டாடு மரவு மெலியுண்ணும்
பீடார் கயிலை மலைப்பெருமான் பிரியா வெங்கை புரநாட்டில்
கோடா விதணிற் புனத்திருந்த கொடியார் சென்ற படியாலே.
(47)