|
நாடரிய சத்தியோ சாதத்தும் வாமத்து நன்றா மகோரத்தினு நவையற்ற புருடத்து மாகமமொ ரைவ்வைந்து நல்கியீ சானத்திலே பீடுதரு மெட்டுமுறை தந்தவற் றிடைநீசொல் பெருமைபெறு மருமைவிதியிற் பேசரிய பூசைசிவ கோசரியெ னப்புரிதல் பெற்றிலேன் மற்றடியனேன் வேடுவர்கு லத்தலைவன் மெய்யன்பு பூண்டிலேன் வேட்டொருவர் மாட்டருளினான் மீக்கொளொரு புடையொப்பு நோக்கிவைத் தனைசாற்றின் வேண்டல்வேண் டாமையிலையால் ஆடுநின் பால்வேறு பாடொன்றி லாமையா லபிடேக மாடியருளே அறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை யபிடேக மாடியருளே.
|
(2) |
|