முகப்பு தொடக்கம்

நாவினைந் தெழுத்து மந்திர மலாத
      நவிற்றுவோர் தமையுநீ யிருப்பப்
பாவினங் கொடுபுன் மனிதரைப் புகழும்
      பாமரர் தமையுமென் றொழிவேன்.
கோவினம் புரப்பக் குன்றமன் றெடுத்த
      குன்றமம் பாடகக் குன்றந்
தாவினஞ் சிலையென் றெடுத்திடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(86)