|
நாடினா ருயிர்க ளாமெவற் றினுக்கு நல்கிய தந்தையுந் தாயு நம்பனு நீயு மல்லிர்நும் மூர்க்கே நவின்றவம் முறையுளீர் நீவிர் பாடியா ரணஞ்சொ லீண்டுமாய் வனதாம் பரிந்துநீ மடிமிசைக் கிடத்தப் பழமலை தனது பெயர்வலக் காதிற் பகர்ந்தருள் செயப்பெறுஞ் செயலால் ஓடியோர் காக மேறுபு கவிழ்த்த வொருசிறு கரகநீர் தானு மொருவனோர் செவியால் விடுத்தவப் புனலு முமையொரு பாகர்கட் டோன்றிக் கேடிலா னந்த வுருவமா மெனையொக் கின்றன வோவென வதிர்த்துக் கிளர்மணி முத்த நதியுடை விருத்த கிரியமர் பெரியநா யகியே.
|
(6) |
|