முகப்பு தொடக்கம்

நிலங்கடந் தவன்முன் னறுமலர் சாத்த
        நிகரிலம் மூர்த்திமுன் சந்து
    நினக்கணி வுறவாட் டாயர்முன் னிருந்து
        நிவேதனம் புரிந்திட் வன்று
நலங்கிளர் கலையர் கலியர்முன் றூப
        நல்விளக் களிப்பநின் றன்னை
    ஞானசம் பந்தப் பிள்ளைமுன் பாட
        நாணிலேன் பூசனை புரிவேன்
விலங்கினுங் கடையர் வளர்த்தசெந் தீயின்
        விரைந்தெழும் வாள்வரி வேங்கை
    விடுப்பவங் கதுவந் தெதிர்ந்திட விகழ்ந்து
        விடாததன் றோலுரித் திருள்கொண்
டிலங்கொளி யிரவி யனையமெய்ப் படுத்த
        விறைவனே யநிட்டநின் றகற்றி
    இட்டநன் குதவி யென்கரத் திருக்கு
        மீசனே மாசிலா மணியே.
(4)