முகப்பு
தொடக்கம்
நினக்குறு கூறா மென்மன மதனை
நிரைவளைத் தளிர்க்கைநெட் டிலைவேற்
சினக்குறு மலர்க்கட் பேதையர் கொளாமற்
செறிந்துநீ யேகவர்ந் தருள்வாய்
புனக்குற மகட்கு மயல்கொடு திரிந்த
பொறிமயிற் குமரனைப் பயந்தோய்
எனக்குறு துணையா யென்கரத் திருக்கு
மீசனே மாசிலா மணியே.
(6)