முகப்பு தொடக்கம்

 
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
நிறைந்தவொரு சச்சிதா னந்தபர சிவத்தி
       னிகழுமுயி ரிப்பியிடை வெள்ளிபோற் றோன்றி
அறிந்துமய லகன்றிடிலொன் றன்றிவே றிலையென்
       றறைவர்சிலர் பதியினைப்போ லாருயிர்நித் தியமே
இறந்துமல சத்திவிடிற் சிவசமா னதையா
       யிருக்குமென வறைவர்சில ரெதுவழக்கென் றடியேஞ்
செறிந்தனநின் றனைவினவ வெங்கள்சிவ ஞான
       தேசிகனே யருண்மலையே பள்ளியெழுந் தருளே.
(1)