முகப்பு
தொடக்கம்
நிணந்திகழ் வடிவேற் காளையே யென்று
நேரிழை யவர்விழைந் திடுவோர்
குணந்திரி தளிரின் மடியவே கண்டுங்
கொடியனேன் வாழ்வுவந் திருந்தேன்
மணந்திமிர் மகளிர் சிலம்பொடு மைந்தர்
வார்கழ றுவக்கிட வலம்போய்த்
தணந்திடு மமயத் தறிந்துநாண் சோண
சைலனே கைலைநா யகனே.
(76)