முகப்பு
தொடக்கம்
நின்னையே நோக்கி விடாதகட் புலனு
நின்னையே நினைக்குநெஞ் சகமும்
நின்னையே துதிக்கு நாவுமென் றருளி
நின்றிரு வடியின்வைத் தருள்வாய்
தன்னையே றினர்க்குச் சகமெலாங் காட்டுந்
தரணியோ டிகலிமே வினர்க்குத்
தன்னையே காட்டு மலையெனுஞ் சோண
சைலனே கைலைநா யகனே.
(93)