முகப்பு தொடக்கம்

நீரினா லழலால் வருங்கொடும் பிணியா
      னிருதரா லலகையால் விலங்காற்
சோரரால் வருந்து மவரலர் நினது
      தூயநா மம்புகன் றிடுவார்
சீருலா மணியா லரிபர வுதலாற்
      றிசையுற நீள்கையா லெழின்மை
சார்தலா லுமையாள் விழிநிகர் சோண
     சைலனே கைலைநா யகனே.
(53)