முகப்பு தொடக்கம்

நீலியோ டுனைநா டொறுமருச் சித்து
      நின்றொழில் புரிந்திட வுடற்குக்
கூலியோ தனமென் றளிப்பவர்க் கன்றிக்
      கூற்றினைக் கடக்குமா றெளிதோ
மாலியோ சனையின்வணங்குறுங் கைலை
      மலைநிவே தித்திடக் குவித்த
சாலியோ தனமென் றிடத்திகழ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(55)