முகப்பு தொடக்கம்

 
தலைமகளைத் தலைமகன்விடுத்தல்
நீயாவி வந்தளித் தாய்தமி யேற்கு நிலாமலினிப்
போயாவி நல்கிநிற் காணா தலமரும் பூவையர்க்கு
மாயாவி னோதர் திருவெங்கை வாணர் வரையினெதிர்
கூயாவி மென்மலர் கொய்துநின் றாடுக கோமளமே.
(139)