முகப்பு தொடக்கம்

 
ஊர் துஞ்சாமை
நீர்துஞ்சுஞ் செஞ்சடை யார்வெங்கை வாணர் நெடுஞ்சிலம்பில்
வார்துஞ்சு மென்முலைக் கோமள மேவந்து மால்வரைமேற்
கார்துஞ்சு மாவின மெல்லாமுன் றுஞ்சக் கடலுந்துஞ்ச
ஊர்துஞ்சி லாததென் னோவிது நான்செய்த வூழ்வினையே.
(207)