முகப்பு
தொடக்கம்
தலைவியையாற்றுவித்திருந்த வருமைசாற்றல்
நீர்மல்கு கண்ணும் வளைதீர்ந்த கையும்வெந் நெட்டுயிர்ப்பும்
பீர்மல்கு கொங்கையு மாய்ப்பின்னை வேறு பிழைப்பிலதாய்
ஆர்மல்கு செஞ்சடை யார்வெங்கை வாண ரருளதனால்
தார்மல்கு தோளண்ண லேபுரந் தேனின் றனியுயிரே.
(262)