முகப்பு
தொடக்கம்
தலைவி கொடுஞ்சொற் சொல்லல்
நீடறி வாய்நின்ற வெம்மான் றிருவெங்கை நேரிழையாய்
பீடறி வாய்நம் முயிரனை யார்தம் பெரும்பணைநீர்
நாடறி வாய்பொரு ணச்சியிப் போது நடந்தகொடுங்
காடறி வாய்துணிந் தாயுனைப் போலிலைக் கன்னெஞ்சரே.
(269)