முகப்பு தொடக்கம்

நீரினி லெழுமொக் குளினழி யுடம்பு
      நிலையென நிலைக்குமா னந்த
வாரிதி படிய வறிந்திடா துழலு
      மடைமையே னுய்யுநா ளுளதோ
ஏரியல் பதமுன் றேடுமக் கேழ
      லின்றுநா டியகிளைத் திடல்போற்
சாரலி னேன மருப்புழுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(14)