முகப்பு தொடக்கம்

நீங்கிய நேயத் தவர்க்கறி வரிய
      நெடியவ னெஞ்சகன் றிடாத
தேங்கிய சோதி மன்றுளா டுவவென்
      சிந்தையு ணடப்பநின் பதங்கள்
ஓங்கிய மூங்கிற் றலைமிசை மலர்வீழ்த்
      துழுமளி புரியிறான் மருவித்
தாங்கிய வால வட்டநேர் சோண
      சைலனே கைலைநா யகனே.
(90)