முகப்பு தொடக்கம்

நெடிமைகொண் டவிர்பவள வார்சடைக் கற்றையு
       நெளிதிரைக் கங்கைநதியு
நெட்டுடற் கட்செவிப் பணியுமத னைத்தெறு
       நெற்றிமிசை யொற்றைவிழியும்
கடிமைகொண் டிடுகவைக் கானெடும் பகடுந்து
       காளமே கம்புரையுமோர்
காலனுயிர் கொண்டசெங் கமலமல ரடியின்மால்
       கண்ணுநீ காணாமையால்
மடிமைகொண் டிங்கழைத் திடவுமொரு மனிததென
       வாரா திராதிகண்டாய்
வழங்குமுடல் பொருளாவி கைக்கொண்டு மருளாது
       மனிதரைத் தனதருளினால்
அடிமைகொண் டிடவந்த கள்ளவடி வினன்விரைந்
       தம்புலீ யாடவாவே
யருள்கசிந் தொழுகுவிழி யுடையசிவ ஞானியுட
       னம்புலீ யாடவாவே.
(5)