முகப்பு தொடக்கம்

நேரா வெமக்குக் கொடுத்தவுட னிலையா தழியும் பொருளாவி
       நெறியின் மயங்கித் தமவென்னு நினைவி னோரிங் கிவரென்றும்
தீரா வெகுளிக் கனற்கிவர்தஞ் சிந்தை முருட்டு விறகென்றுந்
       தீய காமக் கள்ளுண்டு செருக்கு களிய ரென்றுமருள்
கூரா தழுக்கா றெனுமளற்றுக் குழிவீழ் குருட ரிவரென்றுங்
       கொலையை யஞ்சா ரென்றுமுளங் கொண்டு தமியே மழைப்பவுநீ
வாரா தொழியல் பெருங்கருணை வடிவே வருக வருகவே
       மயிலை வரையிற் சிவஞான மணியே வருக வருகவே.
(1)