முகப்பு தொடக்கம்

 
எழுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
நோக்குறு நுதலோ னின்னிடை விருப்பா
     னூற்பக வன்ன நுண் மருங்குல்
வார்க்குவி முலைமென் மகளிர் தம் புலவி
     மாற்றுவான் சென்றன னென்றால்
கோக்கலிக் காமன் வயிற்றிடைக் குத்திக்
     கொண்டதே துக்குநீ புகலாய்
காக்கரு மதலை விழுங்கிய முதலை
     கான்றிடத் தோன்றுநா வலனே.
(15)