முகப்பு தொடக்கம்

 
அவனஃதிவ்விடத்திவ்வியற்றென்றல்
நறையே யிதழி புனைவார் திருவெங்கை நாதர்சடைப்
பிறையே நுதலவர் மானே கருங்கண் பிடித்ததுடிப்
பறையே யிடையணி பாம்பே யகலல்குல் பற்றுமலை
இறையே முலைமலர்த் தண்டலை யேயிட மென்னுயிர்க்கே.
(52)