முகப்பு
தொடக்கம்
பாங்கியிற்கூட்டம்
தலைவனுட்கோள்சாற்றல்
நற்றே மொழியுமை பங்கன் றிருவெங்கை நாடனையீர்
முதற்றே ரிழைமுலை மேனகை யாதியர் முற்றுநுங்கள்
குற்றேவல் செய்யு மடந்தைய ராகக் கொடுப்பனின்னே
சற்றே யருட்கடைக் கண்பார்த்தென் னாவியைத் தாங்குமினே.
(84)