முகப்பு தொடக்கம்

 
இறைவிமே லிறைவன் குறிபிழைப் பேற்றல்
நறவே யிதழியுங் கங்கையும் பாம்பு நகைமதியும்
உறவே யணியு மணிமுடி யார்வெங்கை யூரனைய
புறவே யிளமயி லேயமு தேபசும் பொற்கொடியே
மறவே னுனையென்று நீநினை யாமன் மறப்பினுமே.
(201)