முகப்பு தொடக்கம்

 
பகல்வருவானை யிரவுவருகென்றல்
நந்தே டவிழ்ந்து நறவூற் றிருக்கு நளினமிசை
வந்தேறி மென்றுயில் கொள்வெங்கை வாணர் வரையின்மலர்க்
கொந்தேறு மென்குழ லாண்முக வாவிக் குமுதமலர்ச்
செந்தே னிரவினல் லாற்கிடை யாதென்ன செய்யினுமே.
(240)