முகப்பு தொடக்கம்

 
தலைவி செவ்வணியணிந்து சேடியைவிடுப்புழி யவ்வணி யுழையர்கண்டழுங்கிக்கூறல்
நறுவாய் முருகுமிழ் வெண்டா மரையி னகைமதியம்
மறுவா யளிமுரல் செய்வெங்கை வாணர் வரைமடவீர்
வெறுவாய்மெல் வார்கட் கவல்கிடைத் தாங்குமுன் வீணிலிக
ழுறுவார் தமக்கிவ் வரத்தமெங் கேவந் துதவியதே.
(384)