முகப்பு
தொடக்கம்
நடமிடு பசும்பொற் புரவிமேற் கொண்டு
நளினமென் மலர்க்கரத் தெறிபூம்
படையொடு துரந்து வந்துமென் விடயப்
பகைப்புலி தனையெறிந் திலையே
அடிநடு நிழல்சென் றெழுகட லடைய
வகல்பெரும் புறத்துவா ரிதியில்
தடமுடி நிழல்சென் றுறவளர் சோண
சைலனே கைலைநா யகனே.
(31)