|
நறியமலர் விழிசிவந் துனைவருக வென்றில னடந்ததங் ஙனமாயின்யா நணுகவரு வாயென வழைத்தெதிர் விடுக்கில நாண்மலருன் முகமலர்ந்து சிறியநகை யிளநில வெறிப்பவரு கென்றனன் செயற்கைவடி விதுவன்றுதன் றிருமுடி யணிந்திஃ தியற்கைவடி வெனமனத் தெருள்விலார்த் தெருள் விக்கவோ வறியவுரு வாமிரவி யெதிர்மழுக் குறுசிறுமை மாற்றியொளி பெறவைப்பவோ மாசுட றுடைப்பவோ குறைதவிர்த் தருளவோ மனத்திவர் நினைத்தநினைவை அறியகில மறியாமை யறவருளு குரவனுட னம்புலீ யாடவாவே யருள்கசிந் தொழுகுவிழி யுடையசிவ ஞானியுட னம்புலீ யாடவாவே.
|
(6) |
|