முகப்பு தொடக்கம்

நரம்புதிர மென்புதோன் மூளைதசை பலகூடி
       நரியுமடி செவியசுருள்வா
னாயுநெட் டலகுவிரி சிறகர்வன் கழுகுமிது
       நமதென்ன வந்தவுடலும்
நிரம்புதுயர் செய்தடங் காதுழன் றொழியாத
       நிரயத் தழுத்துபுலனு
நெறிமருண் டலமந்து திரிகின்ற புன்மனமு
       நில்லா தியங்குமுயிரும்
பரம்புபற் பலவாய குணமுமல னென்றுபோய்ப்
       பாசநிலை குலையநின்ற
படியிலெனை யறிதலே நினையறித லாகவிரு
       பதமுமென் முடியில்வைத்துத்
திரும்புத லிலாதவொரு பதமுதவு கொடையாளி
       சிறுபறை முழக்கியருளே
சிவநெறி தழைக்கவரு சிவஞான தேவனே
       சிறுபறை முழக்கியருளே.
(5)