|
நலமலி வாதவூர் நல்லிசைப் புலவ மனநின் றுருக்கு மதுர வாசக கலங்குறு புலனெறி விலங்குறு வீர திங்கள் வார்சடைத் தெய்வ நாயகன் ஒருகலை யேனு முணரா னஃதான்று கைகளோ முறிபடுங் கைகள் காணிற் கண்களோ வொன்று காலையிற் காணும் மாலையி லொன்று வயங்கித் தோன்றும் பழிப்பி னொன்று விழிப்பி னெரியும் ஆயினுந் தன்னை நீபுகழ்ந் துரைத்த பழுதில் செய்யு ளெழுதின னதனாற் புகழ்ச்சி விருப்பன் போலும் இகழ்ச்சி யறியா வென்பணி வானே.
|
(24) |
|