முகப்பு தொடக்கம்

நட்டுவ னாரை யறிகிலன் றண்ணுமை நந்திநின்று
கொட்டுவ னாரை யிரைதேர் கயமுது குன்றுடையாய்
தட்டுவ னாரை யகலாத நான்முகன் றாளமுயர்
குட்டுவ னாரை வனைவான் பரவுநின் கூத்தினுக்கே.
(27)