முகப்பு தொடக்கம்

பழுதிறலை மைக்கு மணியே படுபறை முழக்கு மதுநீ
       பணியென வெனைத்து நினையேல் பனைபுரை புழைக்கை யுழல்வான்
மழைமத மொழுக்கு கவுணால் வளைபிறை மருப்பு வரைமேல்
       வருமரச னுக்கு நிறையா மதுவுறை பிலிற்று மளிவாய்
உழுமல ரயற்கு மலரா ளுயிரெனு மவற்கு மிறையா
       மொருமுத னடிக்கு வதனா லொருகுறை படைத்த துளதோ
செழுமுகில் கவற்று கொடையாய் சிறுபறை முழக்கி யருளே
       சிவமுனிவ கச்சி நகராய் சிறுபறை முழக்கி யருளே.
(7)