முகப்பு தொடக்கம்

 
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
பாக்கியமும் பாலுமுமை புகட்டியமெய்ஞ் ஞானப்
       பாலனீ யளவிறந்த சிவபெருமா னடியார்க்
காக்கியிடல் கருதியே யுருத்திரபல் கணத்தார்க்
       கட்டிட்டல் காணாதே போதியோ வெனத்தன்
தூக்கினிடை யுரைசெய்தா னென்றேயென் றனக்குத்
       தோன்றுகின்ற துலகில்வே றொருவரிலா மையினால்
சீர்க்கவிஞர் புகழ்மயிலை மால்வரையின் விளக்கே
       சிவஞான தேவனெனச் சிறந்தவருட் கடலே.
(52)