முகப்பு தொடக்கம்

 
அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
பாவாய்ப் பொழிந்த வானமுதப்
     பவளத் திருவாய் நம்பிநீ
சேவாய்ப் பொருதுந் தருமமுடைத்
     தேவன் மலைக்குப் போம்பொழுது
காவாய்ப் பயந்த தடக்கைமலர்க்
     கழறிற் றறிவார் கடாவிவரு
மாவாய்ப் பிறக்கக் கிடையாதே
     மாவாய்ப் பிறக்குந் திருமாற்கே.
(31)